கறங்கு வெள் அருவி
|
|
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
|
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
|
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
|
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
|
5
|
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
|
|
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
|
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
|
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
|
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
|
10
|
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
|
|
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
|
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
|
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
|
|
அளியள்தான், நின் அளி அலது இலளே!
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும்
பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
|
|
மேல் |