காய்ந்து செலற் கனலி
|
|
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
|
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
|
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
|
|
விளி முறை அறியா வேய் கரி கானம்,
|
5
|
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
|
|
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து
யாம்
|
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
|
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
|
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
|
10
|
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
|
|
பொருது புண் நாணிய சேரலாதன்
|
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
|
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
|
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
|
15
|
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
|
|
காதல் வேண்டி, எற் துறந்து
|
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு
இரங்கிய தாய் தெருட்டும்
அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
|
|
மேல் |