கார் பயம் பொழிந்த
|
|
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
|
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
|
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
|
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
|
5
|
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
|
|
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
|
|
கால் என மருள, ஏறி, நூல் இயல்
|
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
|
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
|
10
|
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
|
|
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
|
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
|
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
|
|
எல்லை போகிய புல்லென் மாலை,
|
15
|
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
|
|
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
|
|
நல் நிறம் பரந்த பசலையள்
|
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - பேயனார்
|
|
மேல் |