கான் உயர் மருங்கில்
|
|
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
|
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
|
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
|
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
|
5
|
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,
|
|
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
|
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
|
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
|
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
|
10
|
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
|
|
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
|
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
|
|
முருந்து ஏர் முறுவல், இளையோள்
|
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.
|
பொருள் வலித்த
நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |