கானப் பாதிரிக் கருந் தகட்டு
|
|
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
|
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
|
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
|
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
|
5
|
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
|
|
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
|
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
|
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
|
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
|
10
|
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
|
|
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
|
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
|
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
|
|
வில்லோர் குறும்பில் ததும்பும்,
|
15
|
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.
|
புணர்ந்து உடன் போயின காலை,
இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த
காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
மேல் |