கானலும் கழறாது
|
|
கானலும் கழறாது; கழியும் கூறாது;
|
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
|
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
|
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
|
5
|
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
|
|
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
|
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
|
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
|
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
|
10
|
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
|
|
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
|
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
|
|
'நின் உறு விழுமம் களைந்தோள்
|
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.
|
தலைமகள் காமம் மிக்க
கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக்
கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
|
|
மேல் |