குண கடல் முகந்த
|
|
குண கடல் முகந்த கொள்ளை வானம்
|
|
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
|
|
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
|
|
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
|
5
|
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,
|
|
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
|
|
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
|
|
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
|
|
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
|
10
|
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;
|
|
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
|
|
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
|
|
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
|
|
தணிவு அருந் துயரம் செய்தோன்
|
15
|
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி
சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |