குழற் கால் சேம்பின்
|
|
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
|
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
|
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
|
5
|
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
|
|
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
|
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
|
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
|
|
காஞ்சி நீழல் குரவை அயரும்
|
10
|
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
|
|
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
|
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
|
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
|
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
|
15
|
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
|
|
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
|
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
|
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
|
|
என்னொடு திரியானாயின், வென் வேல்
|
20
|
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
|
|
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
|
|
ஆரியர் படையின் உடைக, என்
|
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
|
நயப் புப்பரத்தை இற்
பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது. - பாவைக் கொட்டிலார்
|
|
மேல் |