குன்றி அன்ன கண்ண
|
|
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
|
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
|
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
|
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
|
5
|
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
|
|
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
|
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
|
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
|
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
|
10
|
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
|
|
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
|
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
|
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
|
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
|
15
|
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
|
|
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
|
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
|
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்'
எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்'
என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன்
தாமோதரனார்
|
|
மேல் |