கூழையும் குறு நெறிக் கொண்டன
|
|
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
|
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
|
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண்
|
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
|
5
|
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
|
|
அறியாமையின் செறியேன், யானே;
|
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
|
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
|
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
|
10
|
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
|
|
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
|
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
|
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
|
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
|
15
|
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
|
|
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
|
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
|
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
|
|
மேல் |