கூறாய், செய்வது தோழி
|
|
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
|
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென்
முறிச்
|
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
|
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
|
5
|
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
|
|
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
|
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம்
படர்ந்து,
|
|
இரவின் மேயல் மரூஉம் யானைக்
|
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
|
10
|
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்
|
|
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
|
|
உடு உறு கணையின் போகி, சாரல்
|
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
|
|
பலவின் பழத்துள் தங்கும்
|
15
|
மலை கெழு நாடன் மணவாக்காலே!
|
வெறி அச்சுறீஇ,தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |