கூன் முள் முள்ளிக்
|
|
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
|
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
|
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
|
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
|
5
|
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
|
|
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
|
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
|
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
|
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
|
10
|
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
|
|
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
|
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
|
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
|
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
|
15
|
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
|
|
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
|
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
|
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
|
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
|
20
|
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
|
|
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
|
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
|
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
|
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
|
25
|
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
|
|
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
|
தலைமகன் தோழியை வாயில்
வேண்டி, அவளால் தான் வாயில்
பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய
தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - பாண்டியன்
கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
|
|
மேல் |