கூனல் எண்கின்
|
|
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
|
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
|
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
|
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
|
5
|
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
|
|
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
|
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
|
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
|
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
|
10
|
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
|
|
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
|
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
|
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
|
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
|
15
|
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
|
|
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
|
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
|
|
நொதுமல் விருந்தினம் போல, இவள்
|
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
|
இரவுக்குறி வந்த தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு
கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்
கிழார்
|
|
மேல் |