கேளாய் எல்ல தோழி வாலிய
|
|
கேளாய், எல்ல! தோழி! வாலிய
|
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
|
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
|
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு
உரிஞுதொறும்,
|
5
|
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
|
|
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
|
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
|
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
|
10
|
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
|
|
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
|
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
|
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
|
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
|
15
|
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
|
|
நீர் ஒலித்தன்ன பேஎர்
|
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.
-மாமூலனார்
|
|
மேல் |