கேளாய் எல்ல தோழி வேலன்
|
|
'கேளாய், எல்ல! தோழி! வேலன்
|
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
|
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
|
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
|
5
|
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
|
|
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என,
|
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
|
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
|
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
|
10
|
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்
|
|
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
|
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
|
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
|
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
|
15
|
அணங்கு சால், அரிவையைக் காண்குவம்
|
|
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......
|
|
மேல் |