கேளாய் வாழியோ
|
|
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
|
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
|
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
|
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
|
5
|
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
|
|
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில்
எறிப்ப,
|
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
|
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
|
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
|
10
|
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
|
|
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
|
|
கறவை தந்த கடுங் கால் மறவர்
|
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
|
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
|
15
|
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
|
|
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
|
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
|
|
சேக் கோள் அறையும் தண்ணுமை
|
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல,
செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க்
கண்ணம்புல்லனார்
|
|
மேல் |