கொடு வரி இரும் புலி
|
|
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
|
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
|
|
கானம் கடிய என்னார், நாம் அழ,
|
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண்
தருமார்,
|
5
|
செல்ப" என்ப' என்போய்! நல்ல
|
|
மடவைமன்ற நீயே; வடவயின்
|
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
|
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
|
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
|
10
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்
வாய்
|
|
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
|
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
|
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
|
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
|
15
|
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
|
|
குருதியொடு துயல்வந்தன்ன நின்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
|
செலவு உணர்ந்து வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மதுரைக்கணக்காயனார்
|
|
மேல் |