கொல் வினைப் பொலிந்த
|
|
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும்
புழுகின்,
|
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
|
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
|
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
|
5
|
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய்
|
|
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
|
|
ஆலி வானின் காலொடு பாறி,
|
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
|
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
|
10
|
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
|
|
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
|
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
|
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
|
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,
|
15
|
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது,
|
|
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
|
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்
|
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
|
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
|
20
|
கன்று புகு மாலை நின்றோள் எய்தி,
|
|
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
|
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
|
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ
|
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
|
25
|
அம் தீம் கிளவிக் குறுமகள்
|
|
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?
|
வினைமுற்றி மீண்ட தலைமகன்
தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
மேல் |