கொளக் குறைபடாஅக்
|
|
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
|
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
|
|
கடல் கண்டன்ன மாக விசும்பின்
|
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
|
5
|
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,
|
|
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
|
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
|
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
|
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
|
10
|
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என
|
|
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
|
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
|
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
|
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
|
15
|
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,
|
|
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
|
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
|
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
|
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
|
20
|
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,
|
|
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
|
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
|
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
|
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
|
25
|
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.
|
இரவுக் குறிக்கண் தலைமகளைத்
கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |