கோடு உயர் பிறங்கற்
|
|
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
|
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
|
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
|
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந்
தோட்டுக்
|
5
|
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
|
|
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
|
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
|
|
வரி அணி பணைத் தோள் வார் செவித்
தன்னையர்
|
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
|
10
|
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
|
|
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
|
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
|
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
|
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
|
15
|
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
|
|
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
|
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
|
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
|
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
|
20
|
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
|
|
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
|
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
|
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
|
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
|
25
|
வேனில் அதிரல் வேய்ந்த நின்
|
|
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
மேல் |