கோழிலை வாழைக்
|
|
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
|
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
|
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
|
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
|
5
|
அறியாது உண்ட கடுவன் அயலது
|
|
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
|
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
|
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
|
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
|
10
|
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
|
|
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
|
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
|
|
இவளும், இனையள்ஆயின், தந்தை
|
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
|
15
|
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
|
|
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
|
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
|
பகற்குறிக்கண் செறிப்பு
அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
|
|
மேல் |