சாரல் யாஅத்து
|
|
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
|
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
|
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
|
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
|
5
|
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
|
|
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
|
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
|
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
|
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
|
10
|
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
|
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
|
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
|
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
|
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
|
15
|
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
|
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
|
|
கள்ளி நீழல் கதறுபு வதிய,
|
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
|
|
எமியம் கழிதந்தோயே பனி இருள்
|
20
|
பெருங் கலி வானம் தலைஇய
|
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
|
முன்னொரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச்
சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
மேல் |