சிமையக் குரல சாந்து
|
|
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
|
|
இமையக் கானம் நாறும் கூந்தல்,
|
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
|
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
|
5
|
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்
|
|
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
|
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
|
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
|
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
|
10
|
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,
|
|
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
|
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள்
விளி,
|
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
|
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
|
15
|
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,
|
|
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
|
|
வேய் கண் உடைந்த சிமைய,
|
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை
மகனார் இளங்கீரனார்
|
|
மேல் |