சிலை ஏறட்ட கணை வீழ்
|
|
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
|
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
|
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
|
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
|
5
|
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
|
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
|
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
|
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
|
10
|
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
|
|
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத்
தெறிப்ப,
|
|
மை அற விரிந்த படை அமை சேக்கை
|
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
|
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
|
15
|
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
|
|
'நல்ல கூறு' என நடுங்கி,
|
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
மேல் |