சிறியிலை நெல்லிக் காய்
|
|
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
|
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
|
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
|
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
|
5
|
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,
|
|
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
|
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
|
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
|
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
|
10
|
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
|
|
காமர் புறவினதுவே காமம்
|
|
நம்மினும் தான் தலைமயங்கிய
|
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
இடைக்காடனார்
|
|
மேல் |