சிறு கரும் பிடவின்
|
|
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
|
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
|
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
|
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
|
5
|
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
|
|
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
|
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
|
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
|
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
|
10
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பசை கொல் மெல் விரல், பெருந் தோள்,
புலைத்தி
|
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
|
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
|
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
|
15
|
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர்
திறத்து' என,
|
|
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
|
|
மழலை இன் சொல் பயிற்றும்
|
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகனார்
|
|
மேல் |