சிறு பைந் தூவிச்
|
|
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
|
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
|
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
|
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
|
5
|
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
|
|
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
|
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
|
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
|
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
|
10
|
யாமே எமியம்ஆக, தாமே
|
|
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
|
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
|
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
|
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
15
|
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
|
|
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
|
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது
அழிந்து,
|
|
பானாட் கங்குலும் பகலும்
|
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.-
நக்கீரர்
|
|
மேல் |