சீர் கெழு வியன் நகர்ச்
|
|
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
|
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
|
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப்
|
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
|
5
|
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,
|
|
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
|
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி,
|
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து,
யான்
|
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக்
குறுமகள்
|
10
|
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என,
|
|
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
|
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
|
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
|
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
|
15
|
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்
|
|
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
|
|
மடத் தகை மெலியச் சாஅய்,
|
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே.
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
மேல் |