செல்லல் மகிழ்ந
|
|
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன்
உடையென்மன்
|
|
கல்லா யானை கடி புனல் கற்றென,
|
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
|
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
|
5
|
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
|
|
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
|
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
|
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
|
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
|
10
|
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
|
|
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
|
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
|
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
|
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
|
15
|
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
|
|
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும்,
பொற்புடைக்
|
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
|
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை புலந்து
சொல்லியது. - பரணர்
|
|
மேல் |