செவ் வீ ஞாழற் கருங் கோட்டு
|
|
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
|
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
|
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
|
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
|
5
|
திரைச் சுரம் உழந்த திண் திமில்
விளக்கில்
|
|
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
|
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
|
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
|
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
|
10
|
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி,
|
|
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
|
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
|
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
|
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
|
15
|
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.
|
தோழி இரவுக்குறி வந்த
தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. -
எழுஉப்பன்றி நாகன் குமரனார்
|
|
மேல் |