செறுவோர் செம்மல் வாட்டலும்
|
|
'செறுவோர் செம்மல் வாட்டலும்,
சேர்ந்தோர்க்கு
|
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
|
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
|
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
|
5
|
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர்,
|
|
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப்
பதுக்கைக்
|
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
|
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
|
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
|
10
|
வருவர் வாழி, தோழி! பொருவர்
|
|
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
|
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
|
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
|
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
|
15
|
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
மேல் |