சேற்று நிலை முனைஇய
|
|
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
|
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
|
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
|
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
|
5
|
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
|
|
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
|
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
|
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
|
10
|
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
|
|
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
|
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
|
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
|
15
|
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
|
|
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
|
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர்
நன் முல்லையார்
|
|
மேல் |