தண் கதிர் மண்டிலம்
|
|
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
|
|
பகல் அழி தோற்றம் போல, பையென
|
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
|
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
|
5
|
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
|
|
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
|
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
|
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
|
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
|
10
|
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
|
|
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
|
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
|
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
|
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
|
15
|
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
|
|
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
|
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
|
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
|
|
வந்தன்று அம்ம, தானே;
|
20
|
வாரார் தோழி! நம் காதலோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு
அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்
|
|
மேல் |