தண் கயத்து அமன்ற
|
|
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
|
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
|
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
|
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
|
5
|
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
|
|
மரம் செல மிதித்த மாஅல் போல,
|
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
|
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
|
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
|
10
|
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
|
|
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
|
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
|
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
|
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
|
15
|
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
|
|
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்
நாட்டு
|
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
|
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.-
மதுரை மருதன் இளநாகன்
|
|
மேல் |