தண் கயம் பயந்த
|
|
தண் கயம் பயந்த வண் காற் குவளை
|
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
|
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
|
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
|
5
|
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
|
|
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
|
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
|
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
|
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
|
10
|
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
|
|
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர்
குரல்
|
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
|
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
|
|
ஆடு கழை இரு வெதிர் நரலும்
|
15
|
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!
|
பிரிவிடைத் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார்
இளங்கீரனார்
|
|
மேல் |