தம் நயந்து உறைவோர்த்
|
|
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம்
நயந்து
|
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
|
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
|
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள்
பிறிது
|
5
|
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
|
|
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
|
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
|
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
|
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
|
10
|
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
|
|
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
|
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
|
|
உறுவது கூறும், சிறு செந் நாவின்
|
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
|
15
|
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள்
சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்
|
|
மேல் |