தற் புரந்து எடுத்த

 
383. பாலை
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
காடும் கானமும் அவனொடு துணிந்து,
நாடும் தேயமும் நனி பல இறந்த
5
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
10
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்