தற் புரந்து எடுத்த
|
|
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
|
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
|
|
காடும் கானமும் அவனொடு துணிந்து,
|
|
நாடும் தேயமும் நனி பல இறந்த
|
5
|
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,
|
|
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
|
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
|
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
|
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
|
10
|
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,
|
|
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
|
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
|
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
|
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
மேல் |