தன் ஓரன்ன ஆயமும்
|
|
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
|
|
என் ஓரன்ன தாயரும், காண,
|
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
|
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
|
5
|
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
|
|
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
|
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
|
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
|
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
|
10
|
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
|
|
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
|
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
|
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
|
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
|
15
|
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
|
|
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
|
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
|
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற்
கீரத்தனார்
|
|
மேல் |