தன் கடற் பிறந்த
|
|
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
|
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
|
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
|
|
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
|
5
|
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
|
|
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
|
|
குழியில் கொண்ட மராஅ யானை
|
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
|
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
|
10
|
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
|
|
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
|
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
|
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
|
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
|
15
|
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
|
|
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
|
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
|
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
|
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
|
20
|
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத்
துயல்வர,
|
|
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
|
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
|
|
வெண் குருகு நரல, வீசும்
|
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
|
பொருள்வயிற் பிரியலுற்ற
தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது;
உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச்
சாத்தனார்
|
|
மேல் |