தா இல் நல் பொன்
|
|
தா இல் நல் பொன் தைஇய பாவை
|
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
|
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
|
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
|
5
|
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
|
|
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
|
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
|
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
|
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
|
10
|
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
|
|
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
|
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
|
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
|
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
|
15
|
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
|
|
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க்
குட்டுவன்
|
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
|
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
|
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
|
20
|
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
|
|
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
|
|
எளியள் அல்லோட் கருதி,
|
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.
|
அல்லகுறிப்பட்டு நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது. -பரணர்
|
|
மேல் |