தாழ் சினை மருதம்
|
|
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
|
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு
அழித்து,
|
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
|
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
|
5
|
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
|
|
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
|
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின்,
சினைஇ,
|
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
|
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
|
10
|
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
|
|
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
|
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
|
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல்
அரிவையொடு,
|
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
|
15
|
நீ தற் பிழைத்தமை அறிந்து,
|
|
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
மேல் |