தீம் தயிர் கடைந்த
|
|
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
|
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
|
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
|
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
|
5
|
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்
|
|
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
|
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
|
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
|
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
|
10
|
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,
|
|
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
|
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல்
நகர்ச்
|
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
|
15
|
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
|
|
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்
|
|
மேல் |