துஞ்சுவது போல இருளி
|
|
துஞ்சுவது போல இருளி, விண் பக
|
|
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
|
|
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
|
|
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
|
5
|
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
|
|
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
|
|
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
|
|
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
|
|
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
|
10
|
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
|
|
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு
நிழல்,
|
|
காமர் துணையொடு ஏமுற வதிய;
|
|
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
|
|
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
|
15
|
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;
|
|
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
|
|
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
|
|
கருவிக் கார்இடி இரீஇய
|
|
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.
|
பிரிவிடை மெலிந்த தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார்
|
|
மேல் |