துறை மீன் வழங்கும்
|
|
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
|
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
|
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
|
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
|
5
|
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
|
|
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
|
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
|
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
|
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
|
10
|
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ
|
|
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
|
|
அது புலந்து உறைதல் வல்லியோரே,
|
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
|
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
|
15
|
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,
|
|
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
|
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த
தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது.
-ஓரம்போகியார்
|
|
மேல் |