துன் அருங் கானமும்
|
|
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
|
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
|
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
|
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
|
5
|
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
|
|
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
|
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
|
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
|
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
|
10
|
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
|
|
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
|
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
|
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
|
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
|
15
|
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
|
|
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
|
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
|
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
|
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
|
20
|
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
|
|
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
|
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
|
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
|
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
|
25
|
அணங்குசால், அரிவை இருந்த
|
|
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |