துனி இன்று இயைந்த
|
|
'துனி இன்று இயைந்த துவரா நட்பின்
|
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது
|
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
|
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
|
5
|
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை
|
|
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
|
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
|
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
|
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
|
10
|
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை
|
|
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
|
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
|
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
|
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
|
15
|
செம் முக மந்தி ஆடும்
|
|
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. -
காவன் முல்லைப் பூதனார்
|
|
மேல் |