தூதும் சென்றன தோளும் செற்றும்
|
|
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
|
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
|
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
|
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
|
5
|
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
|
|
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
|
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
|
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
|
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
|
10
|
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
|
|
பணியாமையின், பகை தலைவந்த
|
|
மா கெழு தானை வம்ப மோரியர்
|
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த
|
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
|
15
|
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
|
|
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
|
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு
|
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
|
|
நிரம்பா நீள் இடைப் போகி,
|
20
|
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |