தூ மலர்த் தாமரைப்
|
|
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
|
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
|
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
|
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
|
5
|
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
|
|
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
|
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
|
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
|
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
|
10
|
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
|
|
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
|
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
|
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
|
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
|
15
|
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
|
|
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - எயினந்தை மகனார்
இளங்கீரனார்
|
|
மேல் |