தெறு கதிர் ஞாயிறு
|
|
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
|
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
|
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
|
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
|
5
|
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
|
|
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
|
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
|
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
|
|
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
|
10
|
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
|
|
மை படு திண் தோள் மலிர வாட்டி,
|
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
|
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
|
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
|
15
|
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
|
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
|
|
மெல்லென் சேவடி மெலிய ஏக
|
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
|
20
|
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
|
|
இடு மணற் பந்தருள் இயலும்,
|
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. -
மதுரைக்காஞ்சிப் புலவர்
|
|
மேல் |