தொடங்கு வினை தவிரா
|
|
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன்
தாள்,
|
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
|
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
|
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
|
5
|
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
|
|
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
|
|
மாவின் நறு வடி போல, காண்தொறும்
|
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
|
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
|
10
|
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
|
|
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
|
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
|
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
|
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
|
15
|
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
|
|
கொம்மை வாடிய இயவுள் யானை
|
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
|
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
|
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
|
20
|
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
|
|
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
|
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
|
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
|
வினை முற்றி மீண்ட தலைமகன்,
'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற
தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
|
|
மேல் |